மத்தள விமான நிலையத்தில் மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்றைய தினம் மத்தள விமான நிலையத்திற்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையைப் பார்வையிட்டார்.
நட்டம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாமல் தொடர்ந்தும் புனரமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, விமான நிலையத்தில் ஏற்படும் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.
விமானங்கள் அவசரமாக தரையிறங்குவதற்கு எங்களுக்கு மாற்று விமான நிலையம் தேவை. இது இல்லாவிட்டால் எங்கள் விமானங்கள் அனைத்தும் சென்னைக்கு செல்ல வேண்டும். எனவே, இந்த விமான நிலையத்தை நாங்கள் விரும்பாவிட்டாலும் தொடா்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சா் கூறினாா்.

0 Comments