இன்று கூடிய அமைச்சரவை தேசிய ஓளடத சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
மருந்து விற்பனையின் போது மருந்தின் பொதுப் பெயரை பயன்படுத்த வேண்டும் என தேசிய ஔடத கொள்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த சில ஆலோசனைகளை உள்ளடக்கி இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலத்தினை நடைமுறைப்படுத்துவதினூடாக மருந்துகளின் விலைகளை குறைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments