“எமது நோக்கம் எதிரணி வேட்பாளருக்கு ‘ஜம்பர்’ அணிவிப்பது அல்ல. மாறாக, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றிபெற வைப்பதே.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தேர்தல் பிரசாரத்தை நேர்மையாகவும் கௌரவமாகவும் முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
0 Comments