2022 Zero Chance Stories குறும்பட போட்டியின் முதல் மூன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடல் வழியாக சட்டவிரோத குடியேற்றத்தின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களை ஆக்கப்பூர்வமாக அறிவூட்டுவதில் இலங்கை குறுந் திரைப்பட தயாரிப்பாளர்களின் பங்களிப்பை இந்த போட்டி வெளிப்படுத்தியுள்ளதாகவும், கடல் வழியாக சட்டவிரோதமாக பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த குறும்படப் போட்டி வழி வகுத்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய இறையாண்மை எல்லை நடவடிக்கைப் படையின் தலைமைத் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளாா்.
2022 குறும்படப் போட்டியின் படைப்புகள் வெற்றியை தந்துள்ளதாகவும், நல்ல படைப்புகள் பாிசுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், வெற்றி பெற்ற குறுந்திரைப் படங்கள் தங்கள் தகவல்தொடர்பு திட்டத்தின் மிக முக்கியமான செய்தியை சட்டவிரோதமாக குடியேற்றம் செய்பவா்களுக்கு வழங்கியிருப்பதாகவும் ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தொிவித்துள்ளாா்.
அவுஸ்திரேலியாவின் வலுவான எல்லைக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனித கடத்தல்காரர்களின் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடவும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து தமது வாழ்க்கையை வீணடிப்பவர்களைக் காப்பாற்றவும் இந்த தகவல் தொடர்புத் திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படங்கள் கடல் வழியான சட்டவிரோத குடியேற்றத்தின் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனித கடத்தல்காரர்களின் பொய்களுக்கு மக்கள் இரையாகி தங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை தடுக்க உதவும் என்று நம்புவதாகவும் ரியர் அட்மிரல் ஜோன் குறிப்பிட்டுள்ளாா்.
'அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத குடியேற்றம்' என்ற தொனிப்பொருளில் தயாரிக்கப்பட்ட இலங்கைத் குறுந்திரைப்பட தயாரிப்பாளர்களில்
முதல் மூன்று வெற்றியாளர்கள்
முதல் இடம் - கிரேசன் பிரசாந்த் - வேண்டாம்
இரண்டாம் இடம் - யாஸிர் நிஸார்தீன் - LOST IN DEEP
மூன்றாம் இடம் - தெசோபன் - நீலவேணி
0 Comments