Ticker

6/recent/ticker-posts

21வது திருத்தச் சட்டம் 19 ஐ விட பலம் குறைந்தது! எதிா்க் கட்சிகள் கருத்து!

உத்தேச 21 ஆவது திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளதைப் போன்று பலமானதாக இல்லை என எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன கூறுகின்றன.

சமகி ஜன பலவேகவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் சிங்கள ஊடகம் ஒன்று கேட்ட போது, ​​உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் 19வது திருத்தம் போன்று பலமானவை அல்ல எனத் தெரிவித்தார்.

எனவே தமது கட்சி முன்வைத்துள்ள அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த திருத்தம் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் பலமானவர்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்படுமா என்ற பலமான சந்தேகம் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சட்டத்தரணி நிஷாம் காரியப்பர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் எந்தவொரு தரப்பினருக்கும் தாம் ஆதரவளிப்பதாகத் தெரிவித்த திரு காரியப்பர், 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் 19ஆவது திருத்தச் சட்டத்தை விடவும் குறைவாகவே உள்ளன என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


நிசாம் காரியப்பர் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவருமே அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் வாய்ப்பை விலக்கவில்லை என சுட்டிக்காட்டியதோடு, தமது கட்சிகள் தற்போது திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments