Ticker

6/recent/ticker-posts

தாக்குதலில் உயிரிழந்த வங்கி முகாமையாளா்! கணவன் தலைமறைவு!


ஹக்மன பிரதேசத்தில் வங்கி முகாமையாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஹக்மன கெபெலியபொல சனச வங்கியின் முகாமையாளராவார்.

இவா்  தனது கணவரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளாா். தாக்குதலால் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், பிரதேசவாசிகளால் ஹக்மன கங்கொடகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரின் கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments