தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.
அவருக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்படுமா இல்லையா என்பதை ஜனாதிபதி இதுவரை அறிவிக்கவில்லை.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், அவரின் சேவையை மூன்று மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். அந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது அதன் பின்னர் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இது வரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், வெளிநாட்டில் உள்ள ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அமிபர் பதவிக்கு புதிய மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவதென்றால், ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பித்து ஒப்புதலைப் பெற வேண்டும்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான தேஷபந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் அடுத்த பொலிஸ் மா அதிபராக தெரிவு செய்யப்படவுள்ளோர் பட்டியலில் இருப்பதாக அறிய வருகிறது.

0 Comments