Ticker

6/recent/ticker-posts

டெல்லியில் கிறிஸ்தவ ஆலயம் அடித்து நொறுக்கப்பட்து


இந்தியா டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 5 நாட்களே உள்ளநிலையில் கிறிஸ்தவ ஆலயம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. 

தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு நேற்று இரவு நுழைந்த இனம்தொியாத நபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இச்சம்பவம் இரவு 1 மணியளவில் நடந்துள்ளது. 

வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரையில் முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கிறஸ்தவ ஆலயத்தின் சுற்றுசுவரை ஏறிகுதித்து பிரதான வாசலை திறந்திருப்பதாக தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கில் மர்ம நபர்கள் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments