ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் ரவூப் ஹக்கீம் மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார் என பொதுபலசேன பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஞானசார தேரர், இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு அரசியல் விபச்சாரி எனவும், 2005 மற்றும் 2010 ஆகிய தேர்தல்களிலும் ஹக்கீம் எதிர்கட்சி வேட்பாளருக்கே ஆதரவு அளித்ததாகவும் தேரர் இங்கே சுட்டிக்காட்டினார்.
ரவூப் ஹக்கீம் – மைத்திரிபால சிறிசேன இரகசிய உடன்படிக்கைகள் மற்றும் ஹக்கீம் – சந்திரிகா இரகசிய உடன்படிக்கைகள் என்பன வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
2002ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களைக் கொன்றபோது ஹக்கீம் பிரபாகரனுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாகவும், நாட்டுக்கு சமாதானம் பெற்றுக் கொண்ட பயணத்தில் நாட்டுக்காக முஸ்லிம் காங்கிரஸில் எவரும் உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சிங்களவர்களுக்கு எதிராக சர்வதேசத்தில் சூழ்ச்சி செய்தவர் என்று தேரர் சுட்டிக்காட்டினார்.
பாட்டளி சம்பிக்க போன்றவர்கள் அமைச்சரவையில் சத்தமிடாது இன்று எதிர்க்கட்சி மேடைகளில் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சத்தமிடுவதாகவும், நாட்டில் இன்று மாற்றம் மாற்றம் என பேசப்படுவதாகவும், அந்த மாற்றம் அழிவின்றி சிறந்ததாக இருந்தால் நல்லதே எனவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.

0 Comments