Ticker

6/recent/ticker-posts

காஸாவை நோக்கிய பேரணி ! "குளோபல் மார்ச் டு காஸா" (Global March to Gaza) 12ம் திகதி ஆரம்பம்!



"குளோபல் மார்ச் டு காசா" (Global March to Gaza) எனும் உலகளாவிய அமைதிப் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த முன்னெடுப்பு, பாலஸ்தீனின் காசா பகுதியில் நடைபெறும் இன அழிப்பு மற்றும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான முற்றுகையை எதிர்த்து, உலகம் முழுவதும் இருந்து 10,000-க்கும் அதிகமான ஆர்வலர்களை ஒன்றிணைக்க இருக்கிறது. 

இதில் 32-க்கும் மேற்பட்ட நாடுகளின் தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவத் துறை வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் பங்கேற்கின்றனர்.

இந்த அணிவகுப்பு, ஜூன் 12-ம் திகதி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் தொடங்கி, அல்-ஆரிஷ் வரை பயணித்து, பின்னர் காசா எல்லை வரை அமைதியாக நடந்து செல்லும். இறுதியாக, ரஃபா எல்லைக் கடவையில் இந்தப் போராட்டம் 20ம் திகதி வரை தொடர்ந்து நிகழ்த்தப்படும்.

இந்த அமைதியான அழுத்தம், காசா எல்லையைத் திறந்து, மனிதாபிமான உதவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உள்ளே செல்ல அனுமதிக்கும் என்பதே இதன் நோக்கம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளக்கூடிய சமூக ஆர்வலர்கள், காசா மக்களின் துயரத்தை உலகத்தின் பால் திருப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த வரலாற்று முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments