
மஹியங்கனை பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் காயமடைந்தவர்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குருநாகல் - கும்புக்கெட்ட பகுதியில் ´புதிய சந்ததி´ என்ற அமைப்பின் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
புதிய சந்ததி கலைஞர்கள் என்ற அமைப்பின் பிரபல இளம் நடிகை சமனலி பொன்சேகா, இந்திரசாபா மனுவீர, லக்ஸ்மன் செனவிரட்ன உள்ளிட்ட கலைஞர்கள் நேற்று தாக்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments