Ticker

6/recent/ticker-posts

கொலன்னாவ பிரதேச சபையின் உப தலைவர் கைது

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திஜய குற்றத்திற்காக கொலன்னாவ பிரதேச சபையின் உப தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட தமது 2 சகோதரர்களையும் விடுவிக்குமாறு பிரதேச சபையின் உபதலைவர் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
தொலைபேசி ஊடாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர், கொலன்னாவை பிரதேச சபையின் உபதலைவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments