Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் இன்றைய தினம் கூட உள்ளது. இரண்டாக பிளவடையும் அளவிற்கு கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகளைகளையும் நோக்கில் தீர்மானம் மிக்கதொரு அதி உயர்பீடக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமை பீடமான தாருஸலாமில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. நீண்ட காலமாக கட்சியில் நிலவி வந்த முரண்பாடுகள் இன்றைய கூட்டத்தில் களையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் அடுத்த பேராளார் மாநாடு எங்கு எப்போது நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளது.
கட்சியின் யாப்பில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்து, பழைய யாப்பினையே மீளவும் அமுல்படுத்தல், கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தல், தற்போது தேசியப் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.எச். சல்மானை நீக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக நடைபெற்ற கட்சியின் அதி உயர் பீட கூட்டத்தில் ஹசன் அலி பங்கேற்றிருக்கவில்லை எனவும், இன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் அவர் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments