‘கிறிஸ்து பிறப்பும் நத்தாரின் சிறப்பும்’ எனும் தொனிப்பொருளில் தேசிய நத்தார்விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னாரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
வர்த்தகம், நுகர்வோர், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் கிறிஸ்துவ மத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாடில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டதுடன், அவருடன் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் வின்ஸ்டன் பெர்னாண்டோ ஆண்டகை, மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், வடமாகாண ஆளுனர் றெஜினோல் குரே மற்றும் சர்வமத தலைவர்கள், அருட்சகோதரர்கள், அருட் சகோதரிகள், திணைக்களத் தலைவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் கிறிஸ்து பிறப்பு மற்றும் நத்தார் பாடல் நிகழ்வுகளும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. அதே போன்று கிறிஸ்மஸ் நிகழ்வு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஆதவன்)
0 Comments