Ticker

6/recent/ticker-posts

சிக்கலில் மாட்டிய நாமல் குமார !

இராணுவம் மற்றும் விமானப்படைக்கு போலிச்சான்றிதழ் சமர்ப்பித்து, இணைந்துக் கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் நாமல் குமார மீதான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக கருத்து வெளியிட்டு, அரசியல் நெருக்கடியை உருவாக்கி ஊடகங்களின்  கவனத்தை ஈர்த்த நாமல் குமார, கடந்த சில நாட்களாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு வந்தார்.
மேலும், இந்த கொலை அச்சுறுத்தல் குறித்த அவரது தொலைப்பேசியும் இரசாயணப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே, தற்போது அவர் மீது மேலுமொரு விசாரணையை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தற்போது ஆரம்பித்துள்ளனர்.
அதாவது, இவர் இராணுவம் மற்றும் விமானப்படையில் இணைந்துக்கொண்ட போது, சாதாரணத் தரப்பரீட்சையில் வெறும் 3 பாடங்களில் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளார் என்றும் போலிச்சான்றிதழ்களை வழங்கியே, பாதுகாப்புப் பிரிவில் இணைந்துக் கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அவர் இடைநடுவிலேயே இராணுவத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
VISIT

Post a Comment

0 Comments