( ஐ. ஏ. காதிர் கான் )
பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்யவுள்ளதாக, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தப் பொருட்களைத் தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட வேண்டிய பொருட்களில், பிளாஸ்ட்டிக் கோப்பைகள், பிளாஸ்ட்டிக் கரண்டிகள் மற்றும் பல பொருட்கள் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தவிர, சில அலுமினியப் பொருட்கள் மற்றும் பொலித்தீன் பொருட்கள் போன்றவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் இருந்து பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடைகள், அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்படும் என்றும், சுற்றாடல் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments