74 வயதான மூதாட்டி ஒருவர் நடைபெறும் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கான பரீட்சையில் தோற்றியுள்ளார்.
நாணாயக்கார ஹேவா அத்தபத்து சூரியரத்ன கல்யாணவதி எனும் இந்த மூதாட்டி, மாத்தறை நாவிமன பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
1943 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1956 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையாகத் தோற்றினார்.
தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கான பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பதினாலேயே இவர் இம்முறை பரீட்சை;க்குத் தோற்றியுள்ளார். இவரது அடுத்த இலக்கு 2017 ஆம் ஆண்டு இலத்திரனியல் பாடநெறிக்கான பரீட்சையில் தோற்றுவதே. 80 வயதான இவரின் கணவர் இவரது கல்வி முயற்சிக்கு உதவிவருகிறார்.
கூட்டுறவு திணைக்களத்திலும் தனியார் துறையிலும் கடமையாற்றி ஓய்வுபெற்ற நிலையிலும் கல்வி மீதுள்ள ஆர்வத்தை இவர் இன்னும் கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments