குருணாகல் - தம்புள்ளை வீதியில் கலேவெல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்றைய தினம் (23) மதியம் இடம்பெற்றுள்ளது.
டிப்பர் ரக வாகனமொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் உயிரிழந்த சிறுமியின் தந்தை படுகாயமடைந்துள்ளதாகவும் கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த கலாவெவ, புல்நேவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இதன்போது உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கலேவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கலேவெல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments