யுனெஸ்கோ வெசாக் விழா இடம்பெற்ற 2014ம் வருடம் மே மாதம் 20ம் திகதி முதல் 24ம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு பாரிஸ் நகருக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரின் உறவினரான டேஸி பொரஸ் என்ற பெண்மணி உட்பட நான்கு பேர் தமது பயணச்செலவாக இரண்டு கோடி ஐம்பது இலட்சத்து எண்பதாயிரத்து அறுநூற்றி எண்பத்தொரு ரூபாய் நாற்பத்து ஒன்பது சதங்கள் (2,508,0681.49) செலவிட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதில்ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூற்று எட்டு ரூபாய்கள் (1,53,608.00 ) மதுபானங்களுக்கான செலவாக பதியப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
குறித்த ஹோட்டல் பற்றுச் சீட்டுக்களை பரிசீலனை செய்த போது இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதன்படி சிரன்தி ராஜபக்ஷ மே மாதம் 22ம் திகதி நாற்பத்து ஐந்தாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு ரூபாய்களை(45,864.00) மதுபானத்திற்காக செலவிட்டுள்ளதுடன் 24ம் திகதி இரவு இரண்டு முறை பாவித்த மதுபானத்திற்காக ஒரு லட்சத்து ஏழாயிரத்து எழுநூற்று நாற்பத்து நான்கு (1,07,744) ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாக மேற்படி ஹோட்டல் பற்றுச்சீட்டுக்களை அவதானிக்கும் போது தெரிய வருகிறது.
குறித்த அதே தினத்தில் நாற்பதாயிரத்து இருநூற்று இருபத்து இரண்டு (40,222.00) மற்றும் அறுபத்து ஏழாயிரத்து ஐநூற்று இருபத்து இரண்டு ரூபாய்களும் (67,522.00) மதுபானத்திற்கு செலவிடப்பட்டுள்ளன. மதுபானத்திற்காக ஹிரன்தி ராஜபக்ஷ செலவிட்டுள்ள மொத்த தொகை ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூற்று எட்டு ரூபாய்கள் (1,53,608.00) ரூபாய்களாகும்.
சிரன்தி ராஜபகஷவுடன் தூதரக பெண் அதிகாரிகள் இருவரும் மேற்படி ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் நான்கு பேர்களுக்கான ஹோட்டல் அறை மற்றும் உணவு செலவாக ஒரு கோடியே அறுபத்து ஒரு லட்சத்து எழுபத்தையாயிரத்து நாநூற்று அறுபத்தைந்து ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.
ஹோட்டல் பற்றுச் சீட்டுக்களைப் பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்
யுனெஸ்கோ வெசாக் விழா இடம்பெற்ற 2014ம் வருடம் மே மாதம் 20ம் திகதி முதல் 24ம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு பாரிஸ் நகருக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரின் உறவினரான டேஸி பொரஸ் என்ற பெண்மணி உட்பட நான்கு பேர் தமது பயணச்செலவாக இரண்டு கோடி ஐம்பது இலட்சத்து எண்பதாயிரத்து அறுநூற்றி எண்பத்தொரு ரூபாய் நாற்பத்து ஒன்பது சதங்கள் (2,508,0681.49) செலவிட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதில்ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூற்று எட்டு ரூபாய்கள் (1,53,608.00 ) மதுபானங்களுக்கான செலவாக பதியப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
குறித்த ஹோட்டல் பற்றுச் சீட்டுக்களை பரிசீலனை செய்த போது இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதன்படி சிரன்தி ராஜபக்ஷ மே மாதம் 22ம் திகதி நாற்பத்து ஐந்தாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு ரூபாய்களை(45,864.00) மதுபானத்திற்காக செலவிட்டுள்ளதுடன் 24ம் திகதி இரவு இரண்டு முறை பாவித்த மதுபானத்திற்காக ஒரு லட்சத்து ஏழாயிரத்து எழுநூற்று நாற்பத்து நான்கு (1,07,744) ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாக மேற்படி ஹோட்டல் பற்றுச்சீட்டுக்களை அவதானிக்கும் போது தெரிய வருகிறது.
குறித்த அதே தினத்தில் நாற்பதாயிரத்து இருநூற்று இருபத்து இரண்டு (40,222.00) மற்றும் அறுபத்து ஏழாயிரத்து ஐநூற்று இருபத்து இரண்டு ரூபாய்களும் (67,522.00) மதுபானத்திற்கு செலவிடப்பட்டுள்ளன. மதுபானத்திற்காக ஹிரன்தி ராஜபக்ஷ செலவிட்டுள்ள மொத்த தொகை ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூற்று எட்டு ரூபாய்கள் (1,53,608.00) ரூபாய்களாகும்.
சிரன்தி ராஜபகஷவுடன் தூதரக பெண் அதிகாரிகள் இருவரும் மேற்படி ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் நான்கு பேர்களுக்கான ஹோட்டல் அறை மற்றும் உணவு செலவாக ஒரு கோடியே அறுபத்து ஒரு லட்சத்து எழுபத்தையாயிரத்து நாநூற்று அறுபத்தைந்து ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.
ஹோட்டல் பற்றுச் சீட்டுக்களைப் பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்
0 Comments