( ஐ. ஏ. காதிர் கான் )
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் தயாராகி வருகிறது.
தற்போது நாடு முழுவதும் 400 சதொச விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன. புத்தாண்டு காலத்திற்கு முன்னர் மேலும் 15 சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தேவையான அளவு களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், அவற்றை நாடளாவிய ரீதியிலுள்ள விற்பனைக் கிளைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவர் முஹம்மத் றிஸ்வான் ஹமீத் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, பண்டிகைக் காலத்தில் நடமாடும் இடம்பெயர் விற்பனைச்சேவைகளும் ஆரம்பிக்கப்படும். இவற்றின் மூலம், சலுகை விலைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் சதொச தயாராகி வருகிறது. இக்காலப் பகுதியில், விசேட விலைக் குறைப்புக்களைச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சதொச தலைவர் முஹம்மத் றிஸ்வான் ஹமீத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments