( ஐ. ஏ. காதிர் கான் )
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை, இந்த வாரம் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் யாவும், தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இம்முறை இப் பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் நாடளாவிய ரீதியிலிருந்து தோற்றியிருந்தார்கள்.
இதேவேளை, சமயப் (தஹம்) பாடசாலைகள் தொடர்பான இறுதிப் பரீட்சை, இம்மாதம் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இடம்பெறும் என்றும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக, சுமார் ஒரு இலட்சம் பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments