Ticker

6/recent/ticker-posts

"என்னைப் பதவியில் தொடர அனுமதியுங்கள். உங்களது அரசுக்குத் தேவையான வகையில் எந்தத் தீர்ப்பையும் வழங்குவேன்" மொஹான் பீரிஸ்!

"என்னைப் பதவியில் தொடர அனுமதியுங்கள். உங்களது அரசுக்குத் தேவையான வகையில் எந்தத் தீர்ப்பையும் வழங்குவேன்" என சட்டவிரோதமான முறையில் 44வது பிரதம நீதியரசராக பதவிவகித்தார் எனக் கூறி தற்போது வெளியேற்றப்பட்டுள்ள மொஹான் பீரிஸ், ஜனாதிபதியிடம் கெஞ்சியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


நேற்றுமுன்தினம் காலை 7.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மொஹான் பீரிஸ், தம்மிடம் இவ்வாறு மன்றாடிக் கேட்ட விடயத்தை ஜனாதிபதி நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரியப்படுத்தினார் எனவும் அமைச்சர் ராஜித மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments