அமெரிக்க மில்லேனியம் செலேஞ்ச் கோப்ரேஷன் நிறுவனம் இலங்கைக்கு வழங்கவிருந்த 500 மில்லியன் டொலர் நிதியை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை மீண்டும் திருப்பி செலுத்த தேவையில்லை என்ற அடிப்படையின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படவிருந்தது. இலங்கை வரலாற்றில் இது மிகப்பெரிய நிதியுதவியாகும் எனவும் அவர் மேலும் தொிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியே இதற்கு காரணம் எனவும் ஹர்ச தனது டுவிட்டர் பக்கத்தில் தொிவித்துள்ளார்.

0 Comments