ஜெர்மனியின் டிரெஸ்டென் நகரில் முஸ்லிம் குடியேற்றவாசிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாரந்தோறும் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு நேற்று திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பெகிடா அமைப்பின் தலைவர்களையும், அங்குள்ள மக்களையும் கொல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளமையினாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தாக்குதலின் தன்மை குறித்தும், தாக்குதலை நிகழ்த்தவிருக்கும் பயங்கரவாதிகள் குறித்தும் தமக்கு எந்த தகவலும் இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 Comments