Ticker

6/recent/ticker-posts

மனித உரிமைகளைக் காத்திட வேண்டியது மோடி அரசின் கடமை: Human Rights Watch

மனித உரிமைகளை மீறி நீதிக்கு புறம்பாகச் செயல்படும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர், ராணுவத்தினர் ஆகியோரை தயங்காமல் நீதியின் முன் மோடி அரசு நிறுத்த வேண்டும் என்று நியூயார்க்கில் வெளியிடப்பட்ட பன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு  ( HRW - Human Rights Watch) அமைப்பின் உலக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

2015-ஆம் ஆண்டுக்கான உலக அறிக்கையை இன்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு நியூயார்க்கில் வெளியிட்டது. 

2014-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியின் அரசு பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற செயல்பட வேண்டும் என்றும், குறிப்பாக மகளிர் உரிமைகளைக் காக்கும் சட்டங்கள், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தில் மேம்பட்ட அணுகுமுறை மற்றும் செயல்திறன், சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தல், மற்றும் வளர்ச்சியின் பயன்கள் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்குச் சென்றடைதல் ஆகியவற்றை மோடி அரசு உறுதி செய்ய வெண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments