இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திக்கவுள்ள நிலையில், காணாமற்போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், பான் கீ மூனுக்கும் இடையில் யாழ்ப்பாணம் பொது நூலகத்திலேயே சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், பொது நூலகத்துக்கு முன்னாலேயே காணாமற்போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 4tamilmedia.com
0 Comments