Ticker

6/recent/ticker-posts

மாதம்பை காணி அபகரிப்பு விடயத்தில் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்! பாராளுமன்றில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை

புத்­தளம், மாதம்பை பிர­தே­சத்தில் பல வரு­டங்­க­ளாக வாழ்ந்து வந்­த­வர்­களின் காணிகள் புனித பூமி என்ற பெயரில் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே இது தொடர்பில் அர­சாங்கம் அவ­தானம் செலுத்தி விசா­ர­ணை­ செய்து மக்­க­ளுக்கு நீதி­பெற்­றுக்­கொ­டுக்­க வேண்டும் என கொழும்பு  மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
இதே­வேளை, புனித பூமி என்ற பெயரில் ஆங்­கா­ங்கே சிலரின் திட்­டங்­க­ளுக்­க­மைய காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­றது. இதன்­போது அப்­ப­கு­தியில் வாழும் மக்­களின் அபி­லா­சைகள் கருத்­திற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

அவர்­களின் நலன்கள் குறித்தும் பார்க்­கப்­ப­டு­வ­தில்லை எனவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றம் சுமத்­தினார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை கூடிய பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரின் போது காணி பெறுகை சட்­டத்தின் கீழ் கட்­டளை வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்­கான விவா­தத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;
கடந்த ஆட்சிக் காலத்தின் போது கொழும்பு நகரில் பொது­மக்­களின் காணிகள் பல­வந்­த­மாக கைப்­பற்­றப்­பட்­டன. சட்­டத்­திற்கு முர­ணான முறையில் மக்­களின் காணிகள் பல­வந்­த­மாக கைப்­பற்­றப்­பட்­டன.

முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு தேவைப்­படும் போது மக்­களின் அபி­லா­ஷை­களை கருத்திற் கொள்­ளாது கைப்­பற்­றப்­பட்­டன.

கொழும்பு நகரில் அப­க­ரிக்­கப்­பட்ட காணி­க­ளுக்கு இது­வ­ரையில் உரிய நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வில்லை. கொம்­பனி வீதியில் 400 ஏக்கர் காணி அப­க­ரிக்­கப்­பட்டு 100 வருடம் பழைமை வாய்ந்த வீடுகள் அகற்­றப்­பட்டும் நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வில்லை.

கோட்டை செத்தம் வீதியில் 17 விற்­பனை நிலை­யங்கள் அகற்­றப்­பட்­டன. இதனை பல­வந்­த­மாக அதி­கா­ரத்தை பிர­யோ­கித்து முன்­னெ­டுத்­தனர். இவர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது. சில காணிகள் அவ­சர கால நிலையின் கீழ் அகற்­றப்­பட்­டன.

எனவே ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அநீதி இழைக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதே­போன்று மாதம்பை பிர­தே­சத்தில் புனித பூமி என்ற பெயரில் மக்­களின் காணி கைப்­பற்­றி­யமை தொடர்பில் உரிய விசா­ரணை செய்ய வேண்டும்.

புனித பூமி என்­ற­பெ­யரில் ஆங்­காங்கே காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்டு வர்த்­த­மா­னியில் அறி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எனினும் வர்த்­த­மா­னியில் வெ ளிவரும் வரை காணி அமைச்­ச­ருக்கு விபரம் தெரி­யாமல் இருக்­கின்­றது.

இங்கு மக்­களின் நலன்கள் பேணப்­ப­டு­வ­தில்லை. பல நூறு வரு­டங்கள் குறித்த பகு­தியில் மக்கள் வாழ்ந்­தி­ருப்­பினும் அவர்­களின் விருப்பு வெறுப்பு குறித்து ஆரா­யப்­ப­டு­வ­தில்லை. அத்­துடன், அம்­மக்­களின் தொழில்­வாய்ப்­புகள், விவ­சாயம் குறித்தும் அவ­தானம் செலுத்­தப்­ப­டு­வ­தில்லை.

எனவே காணிகள் அப­க­ரிக்கும் முன்பு பல­கோ­ணங்­களில் ஆரா­ய­வேண்டும். அத்­துடன் கடந்த காலங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட காணி அப­க­ரிப்பு குறித்து தற்­போது விசா­ரணை நடத்­தப்­படுவதுடன் அம்­மக்­களின் தொழில்வாய்ப்புகள், விவசாயம் குறித்தும் அவதானம் செலுத்தப்படுவதில்லை.

எனவே காணிகள் அபகரிக்கும் முன்பு பலகோணங்களில் ஆராயவேண்டும். அத்துடன் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி அபகரிப்பு குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments