( ஐ. ஏ. காதிர் கான் )
இலங்கையில் முதன் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர், சுற்றுலாத்துறையைச் சேர்ந்த 52 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இத்தாலி நாட்டவருக்கு இலங்கை சுற்றுலா வழிகாட்டியாக இருந்து செயற்பட்டு வந்துள்ளார். குறித்த நபருக்கு இந்நோய் தொற்றியிருப்பது, செவ்வாய்க்கிழமை (10) மாலை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நபர், தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கொழும்பு ஐ.டி.எச். (IDH) மருத்துவ மனையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறார் .
இதேவேளை, இலங்கை மக்களை மிக அவதானமாகவும், விழிப்புடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த இருவருக்கு டுபாயில் கொரோனா தொற்று இருப்பதாக, ஐக்கிய அரபு குடியரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments