Ticker

6/recent/ticker-posts

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சீனா தயாராம்!

கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு சகல ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான முன்னாள் தூதுவர் சென் சுயுஹான் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பதவி காலத்தில் இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றதாகவும், இலங்கையின் இயற்கை அழகு தொடர்பாக தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் சீன மக்கள் தொடர்பாக கொண்டுள்ள உண்மையான அன்பு மற்றும் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments