நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தனியாா் (பிரைவேட் லிமிடெட்) நிறுவனத்தின் பதிவுக்கான 4,000 ரூபாய் கட்டணம் 4,600 ரூபாயாகவும், பொது வரையறுக்கப்பட்ட நிறுவன பதிவுக்கான 20,000 ரூபாய் கட்டணம் 23,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அனைத்து பதிவு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, சங்கப் பதிவுக் கட்டணங்களும் திருத்தப்பட்டு, 3,000 ரூபாயாக இருந்த சங்கப் பதிவுக் கட்டணம், 3,450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments