Ticker

6/recent/ticker-posts

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கெர்னல் பதவியை நீக்கத் தீர்மானம்

தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கெர்னல் பதவியை நீக்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கெர்னல் பதவி அதிபர்களுக்கு அவசியமற்றது என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாககல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். 

கடந்த அரசாங்கத்தினூடாக அதிபர்களுக்கு கெர்னல் பதவி வழங்கப்பட்டதாகவும்,அப்போதைய எதிர்க்கட்சி தொடர்ந்தும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார். 
இதனிடையேஅரசியல் செல்வாக்கினால்வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றங்களையும் இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அமைச்சினால் புதிய ஆசிரியர் இடமாற்றக் குழுவொன்று நியமிக்கப்பட்டுஉரிய வகையில் இடமாற்றங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்சுட்டிக்காட்டினார். 

Post a Comment

0 Comments