கடந்த 28.03.2005அன்று கொலை செய்யப்பட்ட “தராக்கி” எனும் சிவராமின் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு, நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பில் “சிவராமின் கொலை தொடர்பாக நடைபெற்ற தீவிர விசாரணையின் பின், பீற்றர் எனும் ஸ்ரீஸ்கந்தராஜா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதுவித சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாதபடியால், அவரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து இவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
0 Comments