எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் 7 இலட்சம் வாக்குகள் முக்கியமானவை என தி ஹிந்து தெரிவித்துள்ளது.
எனினும் அந்த மக்கள் இதனை தமது தேர்தலாக கருதவில்லை என்று தி ஹிந்து தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரை, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு அது தமிழ் மக்களை கோரியுள்ளது. தமிழர்கள் மத்தியில் மைத்திரி தொடர்பில் எதுவித உணர்வும் இல்லை எனினும் மஹிந்தவுக்கு எதிரான உணர்வு நிறைந்துள்ளது என்றும் ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
0 Comments