Ticker

6/recent/ticker-posts

எயார் ஏசியா விமானம் விபத்துக்குள்ளான போது துணை விமானியின் கட்டுப்பாட்டில் இருந்தது

எயார் ஏசியா கியூ. இஸட். 8501 விமானம் விபத்­துக்­குள்­ளா­வ­தற்கு முன்னர் அந்த விமானம் துணை விமா­னியின் கட்­டுப்­பாட்டின் கீழ் இருந்­த­தாக இந்­தோ­னே­சிய விசா­ர­ணை­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

விமா­னத்தின் தரவு பதிவு கரு­வி­யி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்ற தக­வலை அடிப்­ப­டை­யாக வைத்தே விசா­ர­ணை­யா­ளர்கள் இந்தத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளனர்.
மேற்­படி விமான தரவு பதிவு கரு­வி­யா­னது இந்த மாத ஆரம்­பத்தில் விமா­னி
­களின் அறை­யி­லான குரல் பதிவு கரு­வி­யுடன் மீட்­கப்­பட்­டது.
அந்த விமானம் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி இந்­தோ­னே­சிய சுர­பயா நக­ரி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு பய­ணித்த வேளை விபத்­துக்­குள்­ளாகி ஜாவா கடலில் மூழ்­கி­யது.
இது­வரை அந்த விமா­னத்தில் பய­ணித்த 70 பேரின் சட­லங்கள் மட்­டுமே மீட்­கப்­பட்­டுள்­ளன.இந்­நி­லையில் விமான தரவு பதிவு கரு­வி­யா­னது விமா­னத்தின் இறுதி தரு­ணத்தில் என்ன நடந்­தது என்­ப­தற்கு தெளி­வாக வரை­ப­ட­மொன்றை தரு­வ­தாக அமைந்­துள்­ளது என இந்­தோ­னே­சிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையின் தலைமை விசாரணையாளர் மரிட்ஜொனோ சிங்வொசுவர்னோ தெரிவித்தார்.
எயார் ஏசியா விமானத்தின் குரல் பதிவுகள் முடிவுறும் வரை அந்த விமானத்தின் கட்டுப்பாடு துணை விமானியின் கீழேயே இருந்ததாக அவர் கூறினார்.
ஆனால் இது வழமையான செயற்பாடு ஒன்றென அவர் தெரிவித்தார்.
அந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் 30 செக்கனுக்குள் 32,000 அடியிலிருந்து 37,000 அடி வரையான உயரத்திற்கு மேலெழுந்ததாகவும் பின்னர் சடுதியாக 32,000 அடிக்கு விழுந்ததாகவும் விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
அந்த விமான விபத்து தொடர்பான ஆரம்ப கட்ட அறிக்கையே சர்வதேச சிவில் விமான அமைப்பிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையான இறுதிக்கட்ட அறிக்கை வெளியிடப்படுவதற்கு சுமார் 7 மாதங்கள் செல்லலாம் எனவும் இந்தோனேசிய விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments