Ticker

6/recent/ticker-posts

கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ குணம்.

தாவரவியல் பெயர் :- CORIANDRUM SATIVUM.
தாவரக்குடும்பம்    :- UMBELLIFERAE

கொத்தமல்லித் தாவரம், இலைகளையும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களையும் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் கடும் மஞ்சலாக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். 
கொத்தமல்லிக் கீரையை உணவில் வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கின்றாா்கள்.  இதை நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். 
எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லி தாவரத்திற்கு  உண்டு. இதனுடைய விதைஇலை இரண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. 
இதன் விதைகாரம்கசப்புதுவர்ப்புஇனிப்பு என்று நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவையாகும்.

கொத்தமல்லி கீரையில் விட்டமின் ஏ,பி,சி உயிர் சத்துக்களும்,  சுண்ணாம்புச்சத்தும்,  இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் நிரம்பி இருக்கிறது.

இது உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது.
கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும்

கொத்தமல்லி கீரையை உண்பதால் இரத்தம் சுத்தமடையும்புதிய இரத்தம் உண்டாகும்.

இது இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறதுஇன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் 
கொத்தமல்லி கீரைக்கு இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.

கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து 
கொத்தமல்லி கீரையை சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.

பீனிசம்மூக்கடைப்புமூக்கில்புண்மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளையும்  குணமடையச் செய்யும் சக்தி கொத்தமல்லி கீரைக்கு உண்டு.

இது தோல் நோய்களை குணமாக்குகிறது . மன அமைதியையும், நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்

கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சிஆறவைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்களைப்பும் காணாமல் போய்விடும்

ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டிபால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம்மிகுந்த தாகம்,  நாவறட்சிமயக்கம்,  வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.

புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி விதையை பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.

கொத்தமல்லியை வீட்டில் தொட்டிகளில் வளர்க்கவும் முடியும்.

மணல் கலந்து விதைக்க வேண்டும். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முறையாக நீர் ஊற்றி வந்தால் வீட்டிலேயே தேவையான கீரையை பறித்து சமையலுக்கு உபயோகிக்கலாம்.

Post a Comment

0 Comments