Ticker

6/recent/ticker-posts

குமார் குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை எதிர்வரும் 13ம் திகதிவரை நாடு கடத்த வேண்டாம் என உயர் நீதிமன்றம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

முன்னிலை சோஷலிச கட்சி தாக்கல் செய்த மனுவொன்றை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது. 

குமார் குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்த பொலிஸார் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதெனவும் அவ்வாறு செய்வது சட்டவிரோத செயல் என உத்தரவிடும்படியும் முன்னிலை சோஷலிச கட்சி தனது மனுவில் கூறியுள்ளது. 

மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் குமார் குணரத்னத்தை 13ம் திகதிவரை நாடு கடத்தக் கூடாதெனவும் 13ம் திகதி நீதிமன்றில் கருத்து முன்வைக்குமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதால் குமார் குணரத்னத்தை கைது செய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments