முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்த பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை படுகொலை செய்தமை தொடர் பில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்ரு இந்த குற்ரப் பத்திரிகையினை சட்ட மா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்தது.
பாரத லக்ஷ்மன் பிரேம சந்திர, தர்ஷன ஜயதிலக, மொஹம்மட் அஸ்மி, மினிமெல் குமாரசுவாமி ஆகியோரை சுட்டுக் கொன்றமை பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ராஜபுரகே காமினிக்கு கடுங் காயம் ஏற்படுத்தியமை, சட்ட விரோதகோட்டம் கூடியமை, கொலை முயற்சி உள்ளிட்ட 17 குற்றச் சாட்டுக்களை சுமத்தியே சட்ட மா அதிபரால் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மேலதிகமாக அனுர துஷார டீ மெல், சந்தன ஜகத் குமார, சமிந்த ரவி ஜயநாத்,லன்கா ரசஞ்சன, மாலக சமீர, விதான கமகே அமில, சரத் பண்டார, சுரங்க பிரேமலால், சமன் குமார அபேசிங்க, ஜானக பண்டார, ரோஹன மாரசிங்க மற்றும் நாகொட லியனாரச்சிகே சமிந்த ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2001-ம் ஆண்டு வல்பொல, முல்லேரியா என்ற இடத்தில்தேர்தல் காலத்தின் போது பாரத லக்ஷ்மன் பிரேம சந்திரவும் அவருடன் இருந்த மேலும் மூவரும் துப்பாக்கி சமரில் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments