நீதியை நிலைநாட்டுவதற்காக சிறைக்குச் சென்று ‘ஜம்பர்’ அணியவும் தயாராக இருக்கின்றேன் என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று கூடியபோது, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய மரிக்கார் எம்.பி.,”போலியான ஆவணங்களை சபாநாயகர் தயாரித்துள்ளார். இதற்காக சிறைக்குச் செல்லவேண்டிவரும். எனவே, ‘ஜம்பர்’ அணிவதற்கு தயாராகுங்கள்” என்று உதய கம்மன்பில எம்.பி. விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “நான் எந்தவொரு போலி ஆவணத்தையும் தயாரிக்கவில்லை. விசாரணைகளுக்கு முகங்கொடுக்க தயாராகவே இருக்கின்றேன். நீதியை நிலைநாட்டியதற்காக, ஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்காக ஜம்பா் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டால் அதையும் ஏற்றக்கொள்வதற்க நான் தயாராக இருக்கிறேன். நான் நடுநிலை தவறியிருந்தால் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வாருங்கள் என்று அவா் சவால் விடுத்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “நான் எந்தவொரு போலி ஆவணத்தையும் தயாரிக்கவில்லை. விசாரணைகளுக்கு முகங்கொடுக்க தயாராகவே இருக்கின்றேன். நீதியை நிலைநாட்டியதற்காக, ஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்காக ஜம்பா் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டால் அதையும் ஏற்றக்கொள்வதற்க நான் தயாராக இருக்கிறேன். நான் நடுநிலை தவறியிருந்தால் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வாருங்கள் என்று அவா் சவால் விடுத்தார்.

0 Comments