நாடாளுமன்றம் மீண்டும் நவம்பர் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்து அமர்வைப் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments