Ticker

6/recent/ticker-posts

கைது செய்யப்பட்ட நபர் திடீர் மரணம்!

சட்ட விரோதமான முறையில் மதுபானம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தும்மலசூரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறியவருகிறது.

 தும்மலசூரிய பொலிஸ் நிலைய  உத்தியோகத்தர்கள்  இருவரினால் குறித்த சந்தேக நபரை ​கைது செய்து மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும் போது குறித்த நபருக்கு  திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபர் உடனடியாக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

Post a Comment

0 Comments