Ticker

6/recent/ticker-posts

கட்சி தாவுவதற்கு விலை பேசியதில் மைத்திரிக்கும் பங்குண்டு – அஜித் பி. பெரேரா

ஜனாதிபதி  சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவராலும் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கை இடம்பெற்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி  சிறிசேனவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார் என பண்டாரகமவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அஜித் பி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி சிறிசேன, ஒருவருக்கு 500 மில்லியன் ரூபாய் வரையில் பேரம் பேசப்பட்டதாக  கூறியதாக அவர், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குழுக்களாலேயே குறித்த விலை நிர்ணயம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் நாட்டில் ஜனநாயகத்தை மாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அஜித் பி பெரேரா அழைப்பு விடுத்திருந்தார்.

Post a Comment

0 Comments