Ticker

6/recent/ticker-posts

கல்வியியல் கல்லூரிகளுக்கு தபால் மூலமும் விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம்

( ஐ. ஏ. காதிர் கான் )

   கல்வியியல் கல்லூரிகளுக்குப் பதிவு செய்வதற்காக,  தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களைக்  கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார குறிப்பிட்டுள்ளார்.

   இதேவேளை, இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு மாத்திரமே இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   இந்த நிலையில், (15) வெள்ளிக்கிழமைக்கு முன்னர், குறித்த  விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள  கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம், 27 கற்கை நெறிகளுக்காக சுமார் எட்டாயிரம்  மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

   இவ்வாறு கிடைக்கும் விண்ணப்பங்களில் தெரிவு செய்யும் மாணவர்களுக்கான கற்கைநெறிகள், எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம்  இதன்போது மேலும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments