Ticker

6/recent/ticker-posts

அருவக்காடு பகுதிக்கு குப்பை கொண்டு செல்ல ஒரு நாளைக்கு 50 இலட்சம் செலவாகிறதாம்!

கொழும்பில் உள்ள கழிவுகளை அருவக்காடு மீழ் சுழற்சி திட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு  நாள் ஒன்றுக்கு பல மில்லியன் ரூபாய்களை  செலவிட வேண்டியிருப்பதாக அறிய வருகிறது.

கொழும்பில் உள்ள கழிவுகளை புத்தளம் அருவக்காடு திண்மக் கழிவு மீள் சுழற்சி பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


இந்த நடவடிக்கைக்காக நாளாந்தம் 50 லட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக  கொழும்பு  நகர சபையின் பிரதி மேயர்  இக்பால் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த பணிக்காக  லொரிகள் பயன்படுத்தப்படுகின்றன.  இதன் மூலம் 10 முதல் 12 மெட்ரிக் டன் கழிவுகள் கொண்டு செல்லப்படுகின்றன.

குறைந்தபட்சம் 50 லொரிகள் இந்த கழிவுகளை கொண்டு செல்ல பயன்படுத்த படுகின்றன.  இந்த கழிவுகளை கொண்டு செல்லும் ஒரு லொரிக்காக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவிடப் படுவதாகவும்  அதற்கமைய 50 லொரிகளுக்கு  50 லட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளாா்.

Post a Comment

0 Comments