( ஐ. ஏ. காதிர் கான் )
தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கான பீடாதிபதிகள் மற்றும் அதிபர்களுக்கான விண்ணப்பங்களை கல்வியமைச்சு கோரியுள்ளது.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தரம் 3 வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைந்து தரம் ஒன்றிற்குப் பதவி உயர்வு வழங்கப்பட்ட உத்தியோகத்தர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியம்.
தமிழ் மொழி மூலமான கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் ஆகியவற்றுக்கே இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம், கல்வியியற் கல்லூரி பீடாதிபதிகளுக்கான ஆறு வெற்றிடங்கள், உப பீடாதிபதிகளுக்கான 17 வெற்றிடங்கள் மற்றும் ஆசிரியர் கலாசாலை அதிபர்களுக்கான மூன்று வெற்றிடங்கள் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களே தற்போது கோரப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா - ஸ்ரீபாத கல்விக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம், தாழங்குடா, தர்கா நகர் ஆகிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கான பீடாதிபதிகளுக்கும் மற்றும் கோப்பாய், மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை போன்ற ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் அதிபர்களுக்குமான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு, இவ்வருட இறுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

0 Comments