Ticker

6/recent/ticker-posts

தெற்கு பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் மீட்க 2 ஆண்டுகளும் 8 மாதங்களும் சென்றன. -- சரத் பொன்சேகா

பிரபாகரனிடமிருந்து நாட்டை மீட்பதற்காக 2 ஆண்டுகளும் 9 மாதங்களும் தேவைப்பட்டன. தெற்கு பயங்கரவாதியிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற 2 ஆண்டுகளும் 8 மாதங்களுமே தேவைப்பட்டன என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


படைவீரர்களின் நலன்விசாரிப்பதற்காக அண்மையில் நாரேஹன்பிட்ட இராணுவ வைத்தியசாலைக்குச் சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு நான் சிறையிலிருந்து விடுதலையானபோது 2015ஆம் ஆண்டளவில் தெற்கு பயங்கரவாதியிடமிருந்து நாட்டை மீட்பதாக கூறியிருந்தோம். அதனை இன்று வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நான் நாட்டு மக்களுக்காக சேவையாற்றுவேன் என்று சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்


Post a Comment

0 Comments