நாட்டில் புதிதாக கொரோனா தொற்றுக்கு இலக்கான 24 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு - 12 பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த நபர்களில் 24 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இந்தியா “தம்பதிவ” சென்று திரும்பிய பெண்ணொருவரின் மூலம் இப்பகுதி மக்ளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிய வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நபர்களின் மொத்த எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 Comments