Ticker

6/recent/ticker-posts

சினிமா அரங்குகள் மீண்டும் திறக்கப்படும் !



இந்த மாதம் 27 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து சினிமா அரங்குகளும் மீண்டும் திறக்கப்படும் என்று கலாச்சார  அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற சினிமா அரங்குகள் செயற்படஅனுமதிக்கப்படும் என்று கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.

அனைத்து திரையரங்குகளும் திறப்பதற்கு முன்பு கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். என உத்தரவிடப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த  மார்ச் 14 ம் திகதி முதல்  சினிமா அரங்குகள்  மூன்று மாதங்களுக்கும் மேலாக  மூடப்பட்டுள்ளன.

இதுவரை 100 க்கும் மேற்பட்ட திரைப் படங்கள் காட்சிப்படுத்த  பட்டியலில் உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டு்ளன.

Post a Comment

0 Comments