பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமால் ரங்கஜீவ, நேற்று (10) ஊடகவியலாளரொருவரை புகைப்படம் எடுக்க விடாமல் தடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“மவ்பிம ” பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளர் புகைப்படமெடுக்க முற்பட்டதையடுத்து, குறித்த புகைப்பட ஊடகவியலாளரை அவர் கடுமையாக நடத்தியதுடன் ஊடகவியலாளருக்கு தடங்கலும் ஏற்படுத்தி சண்டித்தனம் புரிந்துள்ளார்..
நேற்று மாலை வெலிக்கடை சிறை வழக்கில் பிரதிவாதியாக ஆஜர்படுத்தப்படவுள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமால் ரங்கஜீவவை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து குறித்த ஊடகவியலாளர் புகைபடம் எடுக்க முனைந்துள்ளார்.
இது குறித்து ஊடகவியளாளர் தெரிவித்துள்ளதாவது,
“நியோமல் ரங்கஜீவ வந்தபோது, நான் சில படங்களை எடுத்தேன். இதனை அவதானித்த அவர், நீங்கள் யார் என்னை புகைப்படம் எடுக்க என்று என்னை இழுத்துச் சென்றார்.
நான் எனது அடையாளத்தை நிரூபிக்க ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் காட்டினேன். இதனையடுத்து எனது கமெராவிலிருந்த இரண்டு மெமரி கார்ட்டுகளையும் பெலிஸார் பெற்று கொண்டனர்“என தெரிவித்துள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் போதைப்பொருள் விற்பனை தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

0 Comments