Ticker

6/recent/ticker-posts

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைவர் பதவி ரணிலுக்கு!


ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஐம்பத்தி ஏழாவது மாநாடு பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்த  நடைபெறவுள்ளது. 

இந்த ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைவர் பதவி இம்முறை இலங்கைக்கு கிடைக்கவிருக்கிறது. இதன்படி  நிதி அமைச்சா் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

2016ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைய இலங்கை  நிதியமைச்சருக்கு அந்த பதவி வழங்கப்பட இருக்கிறது.

இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57வது மாநாடு, நாட்டின் பொருளாதார மற்றும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ளது. 

இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் இந்த மாநாடு நடாத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு ஏற்ற சூழல் நாட்டில் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ இந்த வருட ஆரம்பத்திலேயே ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு அறிவித்திருந்தார். 

ஆசிய அபிவிருத்தி வங்கி 68 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments