Ticker

6/recent/ticker-posts

சிரி­யாவில் கடந்த ஆண்டு மோதல்­களில் 17,790 பொது­மக்கள் உட்­பட 76,000 பேர் பலி



சிரி­யாவில் கடந்த 4 வருட கால­மாக இடம்­பெற்று வரும் மோதல்­களில் அந்­நாடு அதி­க­ளவு உயி­ரி­ழப்­புக்­களை எதிர்­கொண்ட ஆண்­டாக 2014 ஆம் ஆண்டு விளங்­கு­வ­தா­கவும் அந்த ஆண்டில் 76,000 க்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் பிரித்­தா­னி­யாவை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் மனித உரி­மைகள் அவ­தான நிலையம் அறிக்­கை­யிட்­டுள்­ளது.
பலி­யா­ன­வர்­களில் 3,501 பொது­மக்கள் உட்­பட 17,790 பொது­மக்கள் உள்­ள
­டங்­கு­கின்­றனர்.
அதே­ச­மயம் கடந்த ஆண்டில் ஈராக்கில் இடம்­பெற்ற மோதல்­களில் 15,000 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இது அந்­நாடு 2007 ஆம் ஆண்­டி­லி­ருந்து அதி­க­ளவு உயி­ரி­ழப்­புக்­களை சந்­தித்த ஆண்­டாக உள்­ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். போரா­ளி­களும் ஏனைய போராளி குழுக்­களும் முன்­னேறி வரு­வதன் கார­ண­மாக அங்கு வன்­மு­றைகள் அதி­க­ரித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் ஐ.எஸ். போரா­ளி­க­ளுக்கு எதி­ராக சிரிய நகர்­க­ளான ரக்கா, கோபேன், டெயிர் அல்–ஸோரில் 17 இடங்­க­ளையும் ஈராக்­கிய நகர்­க­ளான பலுஜா மற்றும் மொசூலில் 12 இடங்­க­ளையும் இலக்­கு­வைத்து வியா­ழக்­கி­ழமை வான் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.
அதே­ச­மயம் சிரிய ஜனா­தி­பதி பஷார் அல்– அஸாத் டமஸ்­கஸின் புற­ந­கரப் பகு­தி­யான ஜொபா­ருக்கு விஜயம் செய்து முன்­ன­ரங்கு படை­யி­னரைச் சந்­தித்தார்.
அஸாத் பீரங்­கி­யொன்றின் அரு­கி­லி­ருந்த படைவீரர்கள் இருவருடன் உரையாடிய வண்ணம் ஒரு படைவீரருடன் கைகுலுக்குவதை வெளிப்படுத்தும் காட்சி அவரது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments